TN-SMART செயலி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 22.08.2019

இளைஞர் செஞ்சிலுவை சங்கம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வக்கோட்டை சார்பாக மாணவர்களுக்கு TN-SMART செயலி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 22.08.2019 வியாழக்கிழமை அன்று நடத்தப்பட்டது. இக் கருதரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் திரு. ப. தமிழ் செல்வம் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் முனைவர். சா. சையத் ஆலம் அவர்கள் மாணவர்களிடம் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், செயலியை பதிவிறக்கம் செய்யும் முறை, செயலியை கையாளும் முறை மற்றும் தகவல்களை திரட்டி அரசுக்கு தெரிப்படுத்துதல் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இறுதியில் கல்லூரியின் பொருளாளர் திரு. மனுவேல் பிரகாஷ் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.





Comments

Popular posts from this blog

கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.02.2020